"இங்கே...
(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை
(D) கற்பகவிநாயகர்
(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.
அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.
கேள்விகள்:
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?"
மேலே குறிப்பிட்டவை பலூன்மாமாவின் திருப்பரங்குன்றம் பற்றிய சந்தேகங்கள். இந்த வாரம் திடீரென நேரிட்ட மதுரைப் பயணத்தில் திருப்பரங்குன்றம் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது என்னுள்ளும் எழுந்த இந்த சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்தது. சீக்கிரம் விரிவாய்ப் பதில் எழுதுகிறேன். ஒரு வாரம் ஊரில் இல்லாததால் முதலில் வீடு ஒழுங்கு செய்தலுக்கு முதல் கவனிப்புத் தேவை. ஆகவே சற்று அவகாசம் கிடைத்ததும் பதிவிடுகிறேன். நன்றி.
Friday, December 28, 2007
பலூன் மாமாவின் கேள்விகளுக்குப் பதில், சில நாட்களில்!
Posted by Geetha Sambasivam at 12/28/2007 02:50:00 PM
Labels: கீதா சாம்பசிவம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
கீதா,
உங்களின் பார்வையை பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் எனக்கு உதவியாய் இருக்கும்
Post a Comment