இப்போது வர இருப்பது அஷ்ட சக்தி மண்டபம்.
மீனாக்ஷி அம்மன் சன்னதியில் நுழைவுவாயிலில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி, இயங்க்னருபினி, ஷ்யமளா, மஹேஸ்வரி, மனொமோஹினி என்ற 8 பெண் தெய்வங்கள் நின்ற நிலையில் அருள் பாலித்துவருகின்றனர். இவை திருமலை மன்னனின் மனைவி ருத்ரபதி அம்மாவால் நிர்மானிக்கப்பட்டது. இம் மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.
இம்மண்டபதின் வாயிலில் மையமாக நின்று அம்மன் சந்நதியை நோக்கினால், உள்ளே நடக்கும் கற்பூர ஜோதியை தரிசிக்கலாம்.
பின்னால் நகரா மண்டபம், வலது பக்கம் மகாத்மா காந்தி பூங்கா, இடதுபுரம் பக்தர்க்ளின் காலனிகளின் பாதுகாக்குமிடம்.
மண்டபத்தில் இடது மூலையில் விநாயகரும், வலது மூலையில் ஆறுமுக கடவுளான முருகனும், ஓரேகல்லில் வடிக்கப் பட்டுள்ளனர். 14மீ நீளமும், 5.5மீ அகலமும் கொண்ட இம் மண்டபம் 1960-63 -ல் கட்டப்பட்டது.
Wednesday, April 9, 2008
அஷ்ட சக்தி மண்டபம்
Posted by சிவமுருகன் at 4/09/2008 07:20:00 PM
Labels: சிவமுருகன், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
படங்கள் யாவும் அருமை!
சில படங்கள் மட்டுமே, நாம நேரடியாகவே பார்ப்பது போல் தோன்றும். அது போன்ற படங்களையே போட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன் என் சுரேஷ்
Post a Comment