Friday, September 21, 2012

பாப்கார்ன் நிரம்பிய காகிதக் குவளை




 ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப 
கலைசார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்தேறும். யுனெஸ்கோ கூரியர் காலம் துவங்கி ராதுகா பதிப்பகத்தின் மொழி பெயர்ப்புகள் ருஷ்ய இலக்கியத்தின் காலம் எனில் பிரஞ்சு இலக்கிய காலமொன்றும் லத்தீன் அமெரிக்க காலமும் செவ்வியல் நவசெவ்வியல் புரட்சியும்  பின்னவீனத்துவ பாய்ச்சலும் ஜப்பானிய முராகமி காலமும் அறிந்ததே. ஒவ்வொரு காலம் சிறுகதைகள் ,நாவல்கள்,பாடல்கள் மற்றும் திரைப் படங்கள் இம்மாற்றங்களை செரித்தே வளர்ந்திருக்கின்றன.

ஆனால் ....
இன்றைக்கு கவிதைகளின் உள்ளீடு மற்றும் ஆன்மா குறித்துப் பேசுவோமாயின் விழுமியங்கள் பெரும் கேள்விக்குரியன. சொல்கொத்திகளின் அமைப்பியல் எச்சங்களை க-வி-தை என்று எழுத்துக் கூட்டி வாசித்துக் கொள்கிறோம்.யூமாவின் பிரதிகள் மனுஷ்ய புத்திரனின் குரலில் பேச முயற்சிக்கின்றன. ழாக் ப்ரெவரோ ,ப்ரக்டோ  ஜான் க்ளீவ்லேண்டோ, அல்லிகிரட்டியோ மொழிபெயர்ப்புக்கும் தன் சொந்த கவிதைக்கும் அதிக  வேறுபாடுகளில்லாமல் எழுதுவது குறித்து கிஞ்சித்தும் குற்றவுணர்வில்லை என்பது நாம் எதிர்நாயகர்களின் காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது .சாயல்களின் சாயல்கள்,பிரதியிலிருந்து பிறக்கும் பிரதிகள்.

தமிழின் சென்ற இரு வருடங்கள் நாவல் பரப்பில் நிகழ்ந்தவை குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகளை ஷகீராவின் குரலில் பாடச் சொல்லி கேட்பது அல்லது யதார்த்தவாதத்தின் மீப்பெரும் கண்ணீர்த்துளியை உறைய வைத்து தேனடை முலாம் பூசி விற்பது அல்லது ஹைதர் அலியின் கோழிக்குஞ்சுகளுக்கு செல்லப் பெயர் வைப்பதுடன் புனைவுச்சம் எய்துவது.மிக முயன்று பத்து ’உலகப் படம்’ பார்த்து ஒரு சிறுகதைத் தொகுப்பு தேற்றுவது  .விதிவிலக்குகள் நிலைக்கின்றன எப்போதும் போல் .

திரைப்படங்கள் ஆம் திரைப்படங்கள் அடைந்திருக்கும் இடம் மிகவும் துயர் படர்ந்தது.தீவிர இலக்கியத்திற்கும் திரைப் படங்களுக்கும் உள்ள தொடர்பு நுட்பமானது. .சிவப்பு மல்லியும் ,சோறும்,வீடும் வந்த மனிதா மனிதா  காலத்தில்தான் வானம்பாடிகள் தங்கள் நெம்புகோல் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள் .இன்னொரு புறம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் காலவெளிச் சேர்க்கையாய் கவிதைகளில் கடலுக்கு அடியில் சிப்பிகளை நகர்த்திக் கொண்டிருந்தார்கள் அல்லது லோலிதாக்கள் அபிதாக்களாய் ஜேஜே என நாவல்களில் உதைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.பின்நவீனத்துவம் என்பதை வடிவம் என்று ’தப்பர்த்தம் பண்ணிக்’ கொண்டு எண்களைத் தலைப்பாக்கி நாவல் எழுதிய காலத்தையும் கடந்தோம்தானே .ப்ளாஷ் பேக் போகட்டும் செர்பியன் டோனில் இருந்து உங்கள் திரை 7டி டிஜிட்டலுக்கு மாறட்டும் ,இன்றைக்கு வருவோம் 


 
சமீபமாய் கொண்டாடப்படும்  ஆகாசத்திண்டெ நிறம்,பர்ஃபி போன்ற திரைப்படங்கள்.(நந்தலாலா பாடிய முகமூடியை எல்லாம் பட்டியலில் தயவு செய்து சேர்க்காதீர்கள் ) கிம்கிடுக்கும் டால்ஸ்டாயின் அறமும் திருந்திய குமாரனின் கதையும் கலந்தால் ஆகாசத்திண்டே நிறம் கிடைத்து விடுகிறது . சார்லி சாப்ளினின் அட்வெஞ்சர்-சிட்டி லைட்ஸ் ,நோட்புக் படத்திலிருந்து சில காட்சிகள் ,சிங்கிங் இன் தெ ரெய்ன் ,பஸ்டர் கீட்டன் காப்ஸ்,மெலனா,கோஷிஷ் -ஹிந்தி ,கிகிஜிரோ,மிஸ்டர் பீன் ,ஜாக்கிச் சான்,அமேலி-ல் இருந்து இசை  கொஞ்சம் ..போதும் பர்ஃபி தயார்.இந்த கலவைகள் சுவாரஸ்யமாய் இருக்கத்தான் இருக்கின்றன என்றபோதும் எத்தகைய வறட்சி இது .

சென்ற வருடம் அதிகம் கவனிக்கப்பட்ட கவிதைத் தொகுப்புகள் பெரிதும் மையம் அற்ற கவிதைகளைக் கொண்டவை .தமிழ்ப்படம்,மது பானக் கடை போன்ற திரைப் படங்கள் இத்தகைய வகைமைக்குள் அடங்குவன என வரையறுத்துக் கொண்டு பேசிப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.உலகமயமாக்கலின் காலத்திற்கு முன்பே திணை திரிந்த நிலங்களுடன் வாழப் பழகி விட்டோம்.இன்று வேறோர் பொதுத் திணை காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது  

உதவியவை: தான்க்வீட் ஒளிக் கோர்ப்புகள்

Wednesday, September 12, 2012

மதுரை மாநகரில் பதின்வயது

டாப்படிக்கிறதுனு ஒரு சமாசாரம் இருக்கு!

இருக்கறதுலயே நல்ல ஜன நடமாட்டம் இருக்கற ஒரு தெரு முக்கு!
அந்த முக்குல வந்து சேருற தெருவுல இருக்கற, ஒம்போதாப்புல இருந்து பன்னென்டாப்பு ப்டிக்கிற பசங்க!!
ரெண்டு சைக்கிள்!!
தெருவுல பார்க் பண்ணிருக்கற டூவீலர் சீட்!!
என்ன பேசுறோம், என்ன செய்யப்போறோம், நமக்கு என்ன பிரச்சனை இருக்கு, பாஸ் ஆவோமா ஃபெயில் ஆவொமானு எந்த கவலையும் இல்லாம சரளாக்களையும், வனஜாக்களையும் சைட் அடிக்கிற சுகம் இருக்கே.....

பரம சுகம்!!!

கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்
நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத 5
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே
நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் 10
அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக்
களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின்
படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக் 15
கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதின் நீக்கித்
தன்பா லுரிமை நன்கன மமைத்த- 20
மானம் பேர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த
கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்
மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி
மலர் மங்கையொடு மணனயர்ந்த 25
அற்றமிலடர் வேற்றானை யாதிராச னவனிசூளாமணி
எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்மன்; மற்றவர்க்கு
மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து
விக்ரமத்தின் வௌிப்பட்டு விலங்கல்வெல்பொறி வேந்தர்வேந்தன்
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன் 30







ஸ்வஸ்திஸரீ
அமிர்தகிரணன் அன்வயத்தில் ஆகண்டலனது அழிவகல
சமர்முகத் தசுரகணந் தலையழியச் சிலைகுனித்து
வடவரையது வலாரசூளிகை மணிக்கெண்டைப் பொறிசூட்டியுந்
தென்வரைமிசைக் கும்போத்வனது தீந்தமிழிற் செவிகழுவியும்
ஹரிஹயன தாரம்பூண்டும் அர்தாசன மாவனோடேறியும் 5
சுரிவளையவன் றிருமுடிமிசைத் தூணிபலபடத் தோளேச்சியும்
ஓதமீள வேலெறிந்து மோராயிரங் கிரதுச்செய்தும்
பூதகணம் பணியாணடும் புவனதலம் பொதுநீக்கியும்
யானையாயிர மையமிட்டும் அபரிமிதமதி செயங்கள்செய்து
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்- 10
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகிப்
பகைப்பூபர் தலைபணிப்பப் பரமேசுரன் வௌிப்பட்டு
அரிகேசரி அசமசமன் அலங்கிய விக்ரமன் அகாலகாலலெனத்chinnamanur






ஸ்வஸ்திஸரீ
திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப
இருநிலத் தொருகுடை நிற்பப் போர்வலி
செம்பியர் சினப்புலி ஒதுங்க அம்புயர்
மேருவில் கயல்விளை யாடப் பார்மிசை
மந்த... ... ... ... ... ... மாற்றி - 5
நாற்றிசை மன்னவர் திறைமுறை அளப்ப
மன்னவ . . . . . . . . .ந் தருளும்
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சடைய பன்மரான உடையார் சீ வல்லப
தேவர்க்கு யாண்டு ஆறாவது. . . .






நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5




உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் 20

பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.





பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின் 15

அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, 20





குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, 30

காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்

குன்றம் குமுறிய உரை. 35


மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு


தெற்குக் கோபுரம்




A MURAL







கூரைச் சித்திரம் ஒன்று